Feb 5, 2008

ஆஃப்கான் - பெண்கள்

பெண்களுக்கெதிரான பயங்கரம் ஆஃப்கானில் பரவுகின்றன.
முத்துப்பேட்டை, அபூ அப்ஃரின்.
அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆக்கிரமிப்பால், ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்.
திரைப்படம் பாவச்செயல் என்று கூறிக்கொண்டு இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமையானது, இன்று கலாச்சாரத்திற்கும் அனாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமாக்கவர்ச்சி நட்சத்திரங்களின் வருகை என்று தற்போது நிலைமையே தலை கீழாக மாறி விட்டது. உலக அழகிகள் உலா வருவதும் இங்கிருந்து தான். நடக்க தெரிந்தும் முள்கள் குத்தியதைப்போல் ஒரு பிரம்மையையும், பணக்கார தோரணையில் ஒரு கஞ்சத்தனமான ஆடையுடனும், கேமரா பார்வைகளுக்கு பல நுணுங்களை கற்றுக்கொடுக்கும் பாவைகளாகவும், மற்றும் சளைக்காமல் பத்திரிகைகளில் இடம் பெறும் நொறுக்கு தீனியாகவும் ஆப்கானிஸ்தான் அழகிகள் ஆகி விட்டார்கள்.
சமீபத்தில் அங்கு நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில், அழகி ஒருத்தி அந்நாட்டு தேசியக்கொடி வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை உடுத்தி வலம் வந்து, பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்தாள். அத்துடன் இங்குள்ள சிறார்கள், படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கிறார்களோ இல்லையோ ஆனால் தெருக்களில் ஆபாச போஸ்டர்களை, சினிமா நடிகைகளில் கவர்ச்சி படங்களையும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதனை பத்திரிகை வாயிலாக நாம் கண்டோம்.
மேலாதிக்க நாட்டின் இசையானது அந்நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் திண்ணமே. ஆம்.. இசையினை இந்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதிற்காக வேண்டி மேலாதிக்க சக்திகள், பல டாலர் தொகையினை செலவு செய்கின்றன இங்கு எனலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை குறிவைத்தே இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இளமையில் கற்றால் மறக்க மாட்டார்கள் என்பதால் இது போல் பல சூழ்ச்சி மாயைகள்
'ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு ப்பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.'அல் குர்ஆன் 33 : 54
உஸ்பெஸ்கிதான் எல்லை மாகாணத்தில், மஸர்-இ-ஷரிப் நகரத்தில் நாகசாந்த் இசைப்பயிற்சி பள்ளியில், ஆறு மாத காலத்திட்டத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி கூடத்தில் 18 பெண்கள் அடங்கிய குழுவானது இசையினை கற்றுக்கொடுக்கிறார்கள் பிறருக்கு. இங்கு, பெண்கள் எப்படி பாடுவது, மற்றும் இசைக்கருவிகளான கீ போர்டு, தபாலா எப்படி வாசிப்பது என்பதினை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பழைய மற்றும் புதுமையான இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இது போல் இசையாலும், பாட்டாலும் சிறு உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானில் தூவி விட்டு அவற்றில் குளிர் காய்கிறது ஆதிக்க சக்திகள். குறிப்பாக 2006 வருட வாக்கில், இந்நாட்டில் டாலர் 9,000 மதிப்பின் படி, ஆதிக்க சக்திகளின் கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்க வேண்டி செலவிட்டு இருந்தது அமெரிக்க சக்திகள்.
இது ஒரு சிறிய சாம்பிள் தான் இது போல் எத்தனையோ கோடிகளை கொடுத்தாவது பல வகைகளிலும் வளரும் நாடுகளையும் வளரும் இளைய சமுதாயத்தினை கெடுக்கவும் ஆதிக்க சக்திகள் முயற்சிகளை மேற் கொண்டு தான் இருக்கிறது.இங்கு படிக்கும் 14 வயதான ஜாக்ரா அம்ரி, கருத்தானது 'சிறு வயது முதல்கொண்டே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், பெண்களும் இசைத்துறையில் சாதிக்கலாம், நானும் வருங்காலத்தில் ஒரு புகழ் பெற்ற இசைக்கலைஞானியாக வருவேன் என்று உறுதிப்பட கூறுகிறார். இங்கு படிக்கும் வயதில் குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா 25 வயதான மாசோமா மாஸாரியும் இங்கு தான் இசைப்பயில்கிறார். மேலும் அம்ரி கூறுகையில், இசையானது ஒரு கெட்ட வழிக்குக்கொண்டு செல்லும் என்று சில பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளை இசை பயில விடுவதில்லை என்கிறார் இவர். ஆகையால் தான் ஆப்கானிஸ்தானில் முன்பு இசைக்கும், பாடலுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவரின் பேச்சானது மேலாதிக்க சக்திகளுக்கு உறுதுணை புரிவது போல் தான் உள்ளது.
தாலிபான் அரசானது போனப்பின் தான் நாங்கள் இருண்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளோம் என்று இங்குள்ள சில பெண்களும் புதுமை விரும்பிகளும் சொல்கிறார்கள். ஆனால் இத்தகைய வெளிச்சங்கள் எல்லாம் இருள் தான் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை..? மறுமை வாழ்விற்கு செல்லக்கூடிய அந்த கார் இருளினை மறந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. தலிபான் ஆட்சி இருக்கும் போது இத்தகைய கலாச்சாரம் கட்டுபாட்டில் இருந்தது எனலாம்.
அன்று,
பெண்கள் வெளியில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லமாட்டார்கள் மற்றும் புர்க்காவால் முகங்களையும் மற்றும் உள்ள பிற உடல் பகுதியினையும் கவனமாக மூடி மறைத்துக்கொள்வார்கள். ஆனால் மேற்கத்தைய கலாச்சாரம் இங்கு பரவி விட்டதால் புதுமையான ஆடையினை உடுத்திக்கொண்டு எந்தவிதமான துணையும் இல்லாமல் இங்குள்ள பெண்கள் வலம் வருகிறார்கள் தன்னந்தனியாக.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண்களில் எடுத்துக்கொண்டால் பாதி பேர்கள் பக்கத்து நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனலாம். மற்ற நாடுகளான ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் நாட்டினை சார்ந்த பெண்கள் இங்கு அதிகம் உள்ளார்கள். அவர்கள் தாங்களும் சுதந்திர வாழ்வினை விரும்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு அனாச்சாரம் என்ற சகதியில் வீழ்ந்து விட்டார்கள்.
ஆள் பாதி.. ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தது. கலாச்சாரங்கள் மற்றும் அனாச்சாரங்கள் அதிகரித்து விட்டமையால், ஆடை கால் பாதி.. ஆள் முக்கால் பாதி.. என்ற புது மொழியானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் பரவி விட்டது ஆதிக்க சக்தியால்..!..?
'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திர மானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவானக, மிகக்கிருபையுடையவனாக இருக்கின்றான்.'அல் குர்ஆன் 33 : 59
பெண்களை ஏக இறைவன் பலஹீனத்திற்கு மேல் பலஹீனமாக தான் படைத்து உள்ளான். ஆனால் அந்த பலஹீனத்தை தம்முடைய பலமாக எண்ணிக்கொண்டு பல ஆதிக்க சக்திகள் பெண்களை எல்லாத்துறைகளிலும் புகுத்தி மகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு இஸ்லாமிய பெண்களை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகத்துறையில் பணிபுரியக்கூடியவர்களாகவும் ஆக்கி உள்ளது. இவற்றில் பணி புரியும் இப்பெண்கள், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு உண்மையான செய்தியினை மறைத்து விடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் இந்த செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் மார்க்க பற்றும் மற்றும் மதப்பற்றும் உள்ளவர்கள் அவர்களை, அவர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று மிரட்டல் விடுகிறார்கள்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் 'ஃபெமினென்சா' என்ற பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்துவ சகோதரி ஒருவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தினை, பிரபல இஸ்லாமிய மாத இதழ் (பார்க்க – விடியல் வெள்ளி ஜீன் 2007 இதழ் பக்கம் 8 மற்றும் 9) வெளியிட்டு இருந்தது.
'முஸ்லிம் பெண்களுக்கு ஒரு கிறிஸ்துவ சகோதரியின் எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு அந்த கட்டுரை இருந்தது. அதனின் சாராம்சம் இதோ.
.அமெரிக்கர்களின் திரைப்படமும், இசையும் நடனமும் பாடலும் தீமைகளை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. முஸ்லிம் பெண்களை மனோ இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடைமுறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான். மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதை அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று உங்களை நம்பவைக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது. சகோதரிகளே.. ஏமாந்து விடாதீர்கள்.. உங்களை நாசமாக்க அவர்களுக்கு (மேற்கத்தியர்களுக்கு) வாய்ப்பை கொடுக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்ததை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள் என்று அந்த சகோதரி, அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இந்த எச்சரிக்கையானது, புதுமைகளை கண்டு புது யுகம் படைக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல.. அனாச்சார சீரழிவால் நாள்தோறும் புதைந்துக்கொண்டு இருக்கும் பல நாட்டில் உள்ள நம்முடைய சகோதரிகள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக தான் அமையும் என்ற நம்பிக்கையுடன்..! வாழ்க்கை முன்னேற்றமும் மற்றும் ஆடம்பர வசதியும் தேவை தான் ஆனால் அதுவே வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தால்..
வருங்காலங்கள் என்ன செய்ய போகிறது..? 1992 ம் வருடத்தில், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான தாஸிகிஸ்தான் (Tajiskistan) பகுதியில் துவங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு போரில் புதைக்கப்பட்ட பல வெடிப்பொருட்கள் தற்போது வெடித்து சிதறுகின்றன. சமீபத்தில் அந்த பகுதியினை சார்ந்த 'சலீம் ஷாய்முதிநாவ் (Salim Saimuddinov) என்ற சிறுவன் தன்னுடைய அண்ணனுடன் மலைப்பிரதேசத்திற்கு சென்று அடுப்பு எரிக்க விறகு எடுக்க சென்று இருக்கின்றான். (அங்கு துவங்கப்பட்ட போரால் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டு உள்ளது என்பது குறிப்படத்தக்கது). அங்கு அவனது காலடியில் பந்து போன்ற ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. அதனை அவன் விளையாட்டுக்காக உதைத்து இருக்கின்றான். தீடிரென்று வெடித்து அந்த சிறுவனின் கால் மற்றும் முகங்கள் பாதிக்கப்பட்டது. அதனை பற்றி அங்குள்ளவர்கள் குறிப்பிடுகையில் இந்த வகையான வெடிப்பொருட்கள் கிளாஸ்டர் பாம் (Cluster Bombs – ShOAB-0.5) என்று அழைக்கப்படுகிறது. இது பயங்கரமான சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள். இது போல் இன்னும் பல வகையான வெடிப்பொருள்கள் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் இத்தகைய வெடிப்பொருட்களானது, செசன்யா உகாண்டா கியூபா, சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இங்குள்ள சிறார்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள போகிறார்களோ..!
தற்போது அமெரிக்காவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் உள்ள சின்னஞ்சிறு மலர்கள் பிறக்கும் போதே பல இன்னல்களுக்கு ஆளாகி தான் பிறக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் ஏதொவொரு வகையில் ஊனமாக தான் பிறக்க செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அந்த அந்த நாடுகளில் பயன்படுத்த படும் இது போல் உள்ள இராசயன வெடிப்பொருட்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம்.
தொட்டிலில் உறங்கும் குழந்தைகளின் நினைவுகள் இரத்தச்சுவடுகளோ..!..? தாமரை மலர் போன்ற கைகளை காணும் போது இரத்தக்கறை தான் மிஞ்சம் என்ற உணர்வுடன் பல(ர்) பிஞ்சுகள்.. பல நாடுகளில்..குழந்தையின் அழுகுரல்.. பசியா..!.. தூக்கமா..? பிறருக்கு தெரியாத பாஷைகள். தாய்க்கு மட்டும் தெரியும்.. ஆனால் கண் விழிக்கும் போது அந்த தாயினை பார்க்க முடிய வில்லை. பாசம் அறிந்த தாயினை துக்கமாக்கிய துரோகிகளால் கரைந்த கண்ணீர்த்துளிகள் ஏராளம்.
துப்பாக்கி துணையுடன் மொட்டுகளை சிறு பருவத்தில் பிய்த்தெறிய கல் நெஞ்சங்கொண்ட கயவர்களுக்கு என்ன துணிச்சல்..சிறு மலர்களை சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து தான் போய் விட்டது என்ற ஆச்சரியங்கள் ஒவ்வொரு நாளும்..?..!
ஏக இறைவன் இந்த உலகத்தினை மிகவும் அழகாக படைத்து இருக்கிறான். அதில் எத்தனையோ இயற்கையான வித்தைகள் இருக்கின்றன். ஆனால் அந்த வித்தைகளை அழிக்கக்கூடிய அளவில் தற்போது ஆதிக்கசக்திகளானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் மற்றும் இடங்களில் குண்டுகளை பொழிந்து அங்கு மாசுக்களை உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பல நாடுகளில் மாசுக்கள் அதிகமாக படிந்து வருகின்றன என்றால் மிகையாகாது. அந்தந்த நாடுகளில் உள்ள மாசுகட்டுப்பாடு அமைப்பானது பல போராட்டங்களையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் மக்களின் மத்தியில் செய்து வருகிறது.
வானங்களிலுள்ளவையும், இன்னும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்கு கேட்பான். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பான். அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 2: 284

Nov 22, 2007

வட்டி - வங்கி -முஸ்லிம்கள் (1)

வட்டி - வங்கி -முஸ்லிம்கள் பகுதி (1)
உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை. பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம்.

இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.
குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
..................................
  • அ) வட்டி என்றால் என்ன..?
  • ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன..?
  • இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?

இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.

வட்டியின் வகைகள்.

ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.
வியாபாரம் வட்டியைப் போன்றதே... என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து 'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்' என்கிறான். 2:275
வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் 'இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்' இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்?
வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் - இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும். பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது.
பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.
உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7)
பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். மார்வாடி வகைறாக்கள் இதற்கு உதாரணம். தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும்.
இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன. பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம். வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை 'வட்டி முறைகளில்' ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான்.
தொடர் வட்டி.
இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).
இவை 'தொடர் வட்டி'க்கு எதிராக இறங்கிய வசனமாகும்.

'பல மடங்காக பெருகும் நிலையில்' என்பது. சேமிப்பு - முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத்தன்மையாகும். ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை. தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன. நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு.
அடுத்து,
வங்கி - வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் - ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம்.
வங்கியும் - வட்டியும்.
வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் கு,டி நடுத்தர வர்கம், வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது.
பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா... என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயம் - தொழில் - வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக, அன்னிய செலவாணி அறவே இல்லாத - உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும்.
அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும். வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு வங்கி விவசாயம் - தொழில் - வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..?
விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.
தொழில் - வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் - திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்)
இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.
லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை 'ஹராம்' என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்..
'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது.
2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.
நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை 'வட்டியோ...' என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.
வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது 'சந்தேகம்'மட்டுமே நிலைத்திருக்கும்.
'ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)
இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.
இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின. ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.
ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.
வங்கியின் கணக்கு நிர்பந்தமா... அடுத்துப் பார்ப்போம்

Oct 26, 2007

திரைமறைவு ஆளுமையில் உலகம்

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை.
இதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆய்வுக்குட்படுத்தினால் உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன? வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பதில் ஒரு போதும் சரியாக இருக்காது.
இதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. - பில்டர்பேர்ஜ் - என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார்.

உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.
இப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ்.
இவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்தனர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.
இக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.
அமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.
இவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் - இது பொய் லட்சியம் - என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.

ஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர் நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் - தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் - என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,
கொஸோவோ போர் முடிவுக்கு வந்தால் ஸைப்ரஸில் மற்றொரு போர் வெடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டிருந்தனர். ஈராக் பற்றிய குறியீடும் இதில் அடங்கி இருந்தது.
இவ்வமைப்புப்பற்றி ஒரு நூல் எழுதிய அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ரோபர்ட் ஆக்கீன்ஸ் என்பவர் தனக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்காக அவ்வமைப்புக் கூட்டங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டு அமைச்சர்கள், மத்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு தொடர்புக் கொண்டு இவ்வமைப்புப் பற்றி சில கேள்விகளை கேட்ட போது, அப்படி ஒரு அமைப்புப் பற்றியே எங்களுக்குத் தெரியாது என்று சொல்லி வைத்தார்போல் அனைவரும் கூறியதைக் கேட்டு தான் தடுமாறி போன விபரத்தை குறிப்பிடுகிறார்.
உலக நாடுகளில் தலையிட்டு அங்கு எத்தகைய அதிகாரத்தையும் பெற்று தான் விரும்பும் மாற்றங்களை செய்யும் அளவிற்கு சக்தியுடன் விளங்கும் இவ்வமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இன்னும் பல பயங்கர அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மாட்ரிக்ஸ் பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியர் இவ்வiமைப்பு பற்றி எழுதிய கட்டுரையில்,
1998 மே 14ம் தேதி மேற்குலகின் அரசியல் கல்வி பொருளாதார முக்கிய பிரமுகர்கள் 120பேர் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட விலையுயர்ந்த கார்களில் ஸ்காட்லாந்து கிராமபுர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர் பூட்டப்பட்ட கதவுகளுக்குள் அதி தீவிர பாதுகாப்புக்குள் நடந்த இவ்வமைப்பின் 46 வது கூட்டத்தில், உலகில் தம் ஆதிக்க எல்லையை விரிவு படுத்தி தங்கள் கலாச்சார பண்பாட்டு திட்டங்களை திணிப்பது சம்பந்தமாகவும், ஆட்சியாளர்களாக யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தீர்மாணிப்பது சம்பந்தமாகவும் விவாதிக்கப் பட்டு முடிவெடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறார். இதற்கான பொறுப்பை நியூஜர்ஸி கவர்னர் கிறிஸ்டின் லீட் வயிட்மான் ஏற்றுக் கொண்டுள்ளார்.
உலகில் எதையும் சாதிக்கும் சக்திப் பெற்றிருந்தும் அதை வைத்து நல்ல மாற்றங்களை கொண்டு வராமல் தம் சக்திக்கு கீழ் மற்ற வேண்டாத நாடுகளை அடிமைப்படுத்தி மேலாதிக்கம் செய்யும் எண்ணத்துடன் தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதே பில்டர்பேர்ஜின் வரலாறாகும்.
இதுபற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாமல் காலம் தள்ளும் போக்குதான் முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.மத்திய ஆசியாவின் மையப் பகுதிகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு நீடித்துக் கொண்டிருக்கும் அமைதியின்மை, ராணுவக் கொலைகள், பதட்டம், நில ஆக்ரமிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்கு இதுபோன்ற அமைப்புகளின் ரகசிய ஆளுமை பெரும் பங்காற்றுகிறது.
இதுபற்றி நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும்.
அல் முஜ்தமஃ அரபு பத்திரிக்கையின் கட்டுரையாளர் அவ்ரஹான் முஹம்மது அலி சொல்வது போல்,இதுபற்றி சிந்திப்போம், ஆக குறைந்தது சிந்திக்க மட்டுமாவது செய்வோம். ஏனெனில் சிந்திப்பதால் எதுவும் தீமை ஏற்படப் போவதில்லை. அதற்கு யாரும் வரி விதிக்கப் போவதுமில்லை.

Sep 20, 2007

மாற்றங்கள் அவசியமே

அபூ அப்ஃரின்.
லண்டன் தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.சி (B.B.C – British Broad casting Corporation) யானது சமீபத்தில் உலகம் முழுவதும் ஆய்வு அறிக்கை ஒன்றினை மேற்கொண்டது. ஈராக்கில், அமெரிக்க கூட்டுப்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டுமா..? அல்லது வேண்டாமா..? என்ற கருத்தினை கேட்டு இருந்தது. இதில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இதில் கலந்துக்கொண்டனர். பல பேரின் கருத்தானது இந்த ஆண்டுக்குள் அமெரிக்க கூ(நா)ட்டு படைகள் வெளியேற வேண்டும் என்று கூறி இருந்தனர். சில பேர்கள் பயந்துக்கொண்டு, கருத்துக்கணிப்பில் எந்த விதமான பதிலையும் கூறவில்லை. 22 நாடுகளை சார்ந்த 23,000 மக்கள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டனர். இதில் 67 சதவீதமான மக்கள் அமெரிக்க கூட்டு படைகள் இந்த ஆண்டுக்குள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும், 49 சதவீதமான மக்கள் நிரந்தரமாக ஈராக்கை விட்டு அமெரிக்க நாச படைகள் வெளியேற வேண்டும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்கா நாட்டிலும் இந்த கருத்துக்கணிப்பானது நடைபெற்றது. அங்கு 61 சதவீதமான மக்கள் சொன்ன கருத்து என்னவென்றால், இந்த வருடத்திற்குள் படைகள் அனைத்து வாபஸ் பெற வேண்டும் என்றனர். 24 சதவீத மக்கள் உடனடியாக படைகள் வெளியேற வேண்டும் என்றனர். 32 சதவீதமான மக்கள் ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அமெரிக்க படைகள் ஈராக்கை விட்டு வெளியேறலாம் என்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இவ்வுலகம் இறை நம்பிக்கையாளனுக்குச் சிறைக்கூடமாகும். இறை நிராகரிப்பாளனுக்குச் சுவனமாகும்.'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,

ஜெர்மனி நாட்டில், 2006 ஆண்டில் 4,000 மக்கள் இஸ்லாம் மார்க்கத்தினை தழுவி உள்ளனர். 2005 ஆண்டில் 1,000 மக்கள் இஸ்லாம் மீது பற்றுக்கொண்டு அதனை மனமுந்து ஏற்றுக்கொண்டு உள்ளனர். இஸ்லாம் அதற்கு முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) இந்த அறிக்கையினை ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அன்பு சகோதரர். சலீம் அப்துல்லா அவர்கள் கூறி உள்ளார்கள். (Br. Salim Abdulla - Director of the Islamic Archives in the western town of Soest). தற்போது ஜெர்மனியில் 3.2 மில்லியன் மக்கள் தொகையில் 18.000 பேர்கள் இஸ்லாத்தினை தழுவி உள்ளார்கள்.

பின்லாந்து நாட்டில் உள்ள ஹால்சிங்கி (HELSINKI) என்ற நகரில், முன்னாள் தீயணைப்புத்துறையை சார்ந்தவர்களும் மற்றும் சில தொழிலாளர் துறையை சார்ந்தவர்களும் சேர்ந்து அங்குள்ள அப்துல்லா தான்மி (Abdullah Tanmi) அவர்கள் தலைமையில் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த இயக்கம் ஒன்றினை அமைத்து உள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் இருக்கும் பின்லாந்து நாட்டில் தற்போது 55,000 இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தின் குறிக்கோள்கள் என்னவென்றால் பின்லாந்து நாட்டின் கடைகளில் மதுபானங்களை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் சில பள்ளிக்கூடங்களில் மார்க்கத்திற்கு எதிராக ஏதேனும் நடந்தால் பிள்ளைகளை அங்கு படிக்க பெற்றோர்கள் அனுப்பக்கூடாது. பொது இடங்கள் மற்றும் இல்லங்களில் நீச்சல் உடைகளை பிள்ளைகள் அணிவதற்கு பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. அடுத்த வருடம் பின்லாந்து நாட்டில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் (Municipal Council Election) இந்த இயக்கம் போட்டியிடும். மற்றும் 2011 ம் ஆண்டில் பொது தேர்தலிலும் இந்த இயக்கம் போட்டியிட்டு மிகப்பெரும் அரசியல் கட்சியாக மாற உள்ளது. இன்ஷா அல்லாஹ்..

துபாய் நாட்டின் துணை அரசரும் மற்றும் பொருளாதாரத்துறை, தொழில் துறை அமைச்சருமான H.H. ஷேக் ஹம்தன் பின் ராஷித் அல் மக்தூம்; அவர்கள் (H.H. Shaikh Hamdan bin Rashid Al Maktoum – Deputy Minister of Dubai and UAE minister of Finance and Industry) கொடுத்த பொருள் உதவியால், ஜெர்மன் நாட்டில் உள்ள ஃபாராங்போர்ட் (Frankfurt) என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 7.9.2007 அன்று மாலை திறக்கப்பட்டது. இந்த பள்ளி வாசலின் கட்டுமானப்பணியானது 2001 துவங்கப்பட்டது. இந்த பள்ளி வாசலுக்கு, இஸ்லாத்தின் முதல் கலிபாவான அபூ பக்கர் அல் சித்திக் (The Mosque named after Abu Bakr Al Siddique, the first Caliph of Islam) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாஷா அல்லாஹ்.. இந்த பள்ளி வாசல் திறப்பு விழாவின் நிகழ்ச்சியில், அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களும், தூதரக அதிகாரிகளும் மற்றும் உள்ள அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.

துபாயில் உள்ள செம்பிறை சேவை இயக்கமானது (Red Cresent Society- RCS)பல தன்னார்வ தொண்டுகளை உலகமெங்கும் செய்து வருகிறது. சமீபத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தோனிஷியா நாட்டில் உள்ள ஃபாண்டா அஷிக் (Banda Aceh) என்ற இடத்தில் 1,033 வீடுகளை திர்ஹம் 18 மில்லியன் செலவில் கட்டிக்கொடுத்து உள்ளது. இந்த சேவை இயக்கத்திற்காக பல உதவிகளை ஐக்கிய அமீரகத்தின் அரசரான ர்.ர் ஷேக் கலீபா பின் ஷையத் அல் நைகியான் ((H.H Shaikh Khalifa Bin Zayed Al Nahya) அவர்கள் கொடுத்து உள்ளனர். ஆகையால் அவருடைய பெயரினை அந்த இடத்திற்கு வைத்து உள்ளனர். அத்துடன் ரமளான் மாதந்தோறும், நோன்பாளிகள் நோன்பு திறக்கவேண்டும் என்பதற்காக வேண்டி பல ரமளான் குடில்களை (Ramalan Tents) துபாயின் பல மாகாணங்களில் ஆங்காங்கே அமைத்து உள்ளனர். இந்த ரமளான் குடில்கள் நோன்பு காலங்களில் மட்டும் செயல் படும். இதனால் பல தொழிலாளர்கள் அங்கு மிக சிறப்பாக நோன்பினை திறக்கவும் மற்றும் பல நண்பர்களுடன் பல நாட்டவர்களும் கலந்து உரையாடி மகிழ்வுடன் மற்றும் சந்தோஷத்துடன் நோன்பு திறக்க வசதி வாய்ப்பாக இது அமைகிறது. சகோதரத்துவம் நிறைந்த மார்க்கம் என்பதினை இதிலிருந்தே நாம் கண் கூடாக காணலாம்.

இது போல், அமெரிக்காவில் மக்களின் சேவையினை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பல இஸ்லாமிய அமைப்புகள் ஆதிக்க சக்தியால் பல வருடங்களாக நசுக்கப்பட்டு வருகின்றன. இச்சேவை நிறுவனங்கள் அனைத்தும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல் படுகின்றன என்ற ஒரு காரணத்தினை காட்டி நசுக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தில் செயல்பட்ட இஸ்லாம் - அமெரிக்க சேவை இயக்கமும் (Islamic – American Relief Agency) டெக்ஸாஸ் மாகாணத்தில் மிக பெரிய அளவில் செயல்பட்ட புனித பூமி சேவை நிறுவனமும் (Holy Land Foundation for Relief and Development) மற்றும் மெக்ஸிகன் மாகாணத்தில் செயல்பட்ட Good Will Charitable Organisation என்ற இயக்கமும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆகையால் நோன்பு காலங்களில் இங்குள்ள இஸ்லாமியர்கள்; தாங்களின் 'ஜகாத்' தொகையினை யாரிடம் கொடுப்பது, எந்த விதமான முறையில் அதனை கொண்டு கொடுப்பது, யார் யாருக்கு பகிர்ந்து கொடுப்பது, எப்படி கொடுப்பது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.

பல மேற்கத்திய நாட்டவர்கள் உண்மையான மார்க்கம் என்றும் சத்திய மார்க்கம் என்றும் இது தான் நேர் வழியை காட்டக்கூடிய மார்க்கம் என்றும் இஸ்லாத்தினை அவர்கள் புரிந்துக்கொண்டனர். அல்லாஹீதலாவின் பெரும் உதவியால் அதிகமானளவில் பல மக்கள் இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்குள்ளவர்கள் இண்டர்நெட் மூலமாக விளம்பரங்களை கொடுத்து யாராவது எங்களுக்கு இஸ்லாத்தினை பற்றிய முழுவிவரங்களை சொல்லிக்கொடுக்க தயாராக இருக்கிறீர்களா..? என்றும் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையமைப்பில்தான் பிறக்கின்றன. பிறகு அவர்களது தாய் தந்தையர்கள் அவர்களை யூதர்களாகவோ, கிறஸ்த்துவர்களாகவோ, நெருப்பi வணங்குபவர்களாகவோ உருவாக்கி விடுகின்றனர். இது எவ்வாறுள்ளதெனில், ஒரு கால்நடை நல்ல ஆரோக்கியமான குட்டியைத்தானே ஈன்றெடுக்கின்றது, நீங்கள் அதில் ஊனமுடையதைப் பார்க்கவா செய்கின்றீர்கள்? அல்லாஹ் எந்த இயற்கையமைப்பில் மனிதர்களைப் படைத்துள்ளானோ அதே இயற்கையமைப்பை மேற்கொள்ளுங்கள். அல்லாஹ் படைத்த இயற்கையமைப்பில் எந்த மாற்றமும் இருந்திட முடியாது! இதுவே முற்றிலும் மேலான செம்மையான மார்க்கமாகும்'
அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: புகாரி,முஸ்லிம்,

அமெரிக்க மட்டும் அந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஒரு பிடியாக இருக்கிறது. என்ன செய்வது.. அல்லாஹ் நாடினால் மாற்றம் நிச்சயமாக ஏற்படும் அங்கேயும். அமெரிக்க நாட்டைச்சார்ந்த எல்லோரும் இஸ்லாத்தினை தழுவ கூடிய காலம் வெகு விரைவில் வரும் அதனை நாம் காணத்தான் போகிறோம். இன்ஷா அல்லாஹ்..நாம் இல்லையென்றாலும் நம்முடைய சந்ததிகள் காணத்தான் போகிறார்கள்.

அமெரிக்க பல நாடுகளில் புரியாமல் மாட்டிக்கொண்டு தற்போது என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கிறது. பல நாடுகளில் அமெரிக்காவிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 7.9.2007 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆசிய – பசிபிக் பொருளாதார கருத்தரங்கானது (Asia - Pacific Economics Co-Operations (APEC)மூன்று நாட்கள் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் கலந்துக்கொள்ள பல நாட்டினை சார்ந்த 21 தலைவர்கள் கலந்துக்கொண்டனர். அந்த கருத்தரங்கத்தின் வளாகத்தின் வெளியே போர் எதிர்ப்பு அணியினர் கைகளிலும் மற்றும் முகத்திலும் சிவப்பு கலரில் உள்ள வர்ணங்களை பூசிக்கொண்டு தாங்களின் எதிர்ப்பு குரல்களை எழுப்பினார்கள் அங்குள்ள இளைய சமுதாயத்தினர்.

அமெரிக்காவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான General. James Jonesஅவர்கள் சமீபத்தில், NBC என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்கா தன்னுடைய ஈராக்கில் ஏற்பட்ட தோல்வியினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனுடைய அடுத்த கட்ட நடவடிக்கையான வளைகுடாவின் ஒரு சில பகுதிகளை தாங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம் என்ற அதனுடைய முகத்திலும் தற்போது கரிப்பூசப்பட்டு வருகிறது. ஆகையால் வளைகுடாவில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் அமைதியான ஒரு திருப்பம் மற்றும் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.

அமெரிக்காவை சார்ந்த Former Federal reserve Chairman ALAN GREENSPANஅவர்கள் குறிப்பிடுகையில், அமெரிக்கா நாடானது தன்னுடைய தாகத்தினை தீர்க்க எரிப்பொருள் வேண்டும் என்பதற்காக வேண்டி தான் ஈராக்கை தேர்ந்தெடுத்துக்கொண்டது என்று தன்னுடைய கண்டனத்தினை தெரிந்து உள்ளார்.

15.9.2007 சனிக்கிழமையன்று, அமெரிக்கா வெள்ளி மாளிகை முன்பாக சுமார் 6,000 அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டமானது அமெரிக்காவிற்கு எதிரான போர் எதிர்ப்பு குரலாக ஒலித்தது. இதில் 197 நபர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதில் பாதி பேர்கள் ஈராக்கிலிருந்து திரும்பி சென்ற போர் படையினரும் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் தான். போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்குள்ள காவல் துறையினர் போராட்டத்தினை கலைக்க அவர்களின் முகங்களில் மிளகாய் தூள் அடங்கிய பைப்பினை கொண்டு அடித்தார்கள்.

2005 செப்டம்பர் மாதத்தில் டானிஷ் (Danish) நாடானது இறுதித்தூதரை பற்றிய சில பொய்யான சித்திரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த சமயத்தில் பல நாடுகளில் பல எதிர்ப்புகளை ஆதிக்க சக்திகள் சந்தித்தன என்பதனை நாம் மறந்துவிட வில்லை. அப்போது உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பல உயிர்களை பல உடமைகளை நாம் பறிக்கொடுத்தோம். அப்போராட்டத்தில் வளைகுடா நாடுகளும் கலந்துக்கொண்டன. ஆனால் சாலைப்போராட்டமாக அவர்கள் செய்யாமல், டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்களை தடை செய்தனர் அந்த அந்த நாடுகளில். இதனால் டானிஷ் நாட்டிற்கு பல கோடி டாலர் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நாட்டு பொருட்களை கடைகளில் இருந்தால் அதனை குப்பைகளில் தூக்கி போட வேண்டும் என்றும் அப்படி குப்பைகளில் போடாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது வளை குடா நாடுகள். தற்காலிமாக அந்த பொருட்கள் நிறுத்தப்பட்டன வளைகுடா நாடுகளில். ஆனால் அந்த சம்பவம் நடந்து ஒரு சில மாதங்களில் மீண்டும் டானிஷ் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில் திரும்பவும் வந்து விட்டன. வளைகுடா வாழ் மக்கள் அதனை மறந்து விட்டமையால் டானிஷ் தயாரிப்புகள் அதிகமான அளவில் சந்தைக்கு வந்து விட்டன. மக்கள் அதனை விரும்பி வாங்குகிறார்கள். அந்த நாட்டிற்கு தன்னுடைய ஆதரவினை, அந்த நாட்டு பொருட்களை வாங்குவதால் அவர்கள் காட்டுகிறார்கள்.

'விசுவாசங்கொண்டோரே..! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில சிலர், சிலருக்குப்பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவாகளை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர் வழி காட்ட மாட்டான்'. திருக்குர்ஆன் 5: 51(இது பொதுவாக அனைத்து கிறஸ்த்தவர்களுக்கு எதிரான வசனமல்ல. யார் எதிரியாக இருப்பார்களோ அவர்கள் குறித்து சொல்லப்பட்ட எச்சரிக்கை (ஆசிரியர்)

டென்மார்க் நாட்டை தொடர்ந்து, தற்போது சுவீடன் நாடும் தன்னுடைய புத்தியை காட்ட ஆரம்பித்து விட்டன. சுவீடன் நாட்டைச்சார்ந்த கார்டூனிஸ்ட் Lars Vilks என்பவர், வரைந்த முஹம்மது நபியின் சித்திரப்படமானது சுவீடன் நாட்டிலிருந்து வெளிவரும் Nerikes Allehand என்ற பத்திரிகையானது சென்ற மாதம் ஆகஸ்டு 18 ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. தற்போது எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள மக்களிடம் பல எதிர்ப்பினை கிளப்பி உள்ளது அந்த சம்பவம். சுவீடன் நாட்டு பிரதம மந்திரியான Fredrik Reinfeldt என்பவருடன் அந்த நாட்டு இஸ்லாமிய இயக்கத்தினை சார்ந்த 22 நபர்கள் இந்த சம்பவத்தினை பற்றி அவரிடம் வலியுறுத்தி உள்ளார்கள். மேற்குறிப்பிட்ட பத்திரிகையானது மன்னிப்பினை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள். சமீபத்தில் அந்நாடு மன்னிப்பு கேட்டு விட்டதாக ஊடகத்துறைகள் தெரிவித்து விட்டன.

டென்மார்க் நாட்டினை போல் சுவீடனும் தற்போது இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய போகிறோம். நாமே கேட்டு கொள்வோம்..? விடைகள்.. அந்த நாட்டு பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இது போல் வேற ஏதேனும் நாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செயல் பட்டால் நாம், நம்முடைய பணத்தின் ஒரு சல்லியினை கூட அவர்களுக்காக கொடுக்க கூடாது. நாம் கொடுக்கும் ஒரு சல்லி காசு கூட எந்த வழியிலும் அந்த நாட்டிற்கு போகக்கூடாது. அந்த நாட்டு பொருட்களை வாங்கவே கூடாது. அப்போது தான் நாம் நாமாக இருக்க முடியும். இல்லையென்றால் நம்மை அந்த ஆதிக்க சக்திகள் அடிமையாக்கி வைத்து விடுவார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இருந்து ஆதிக்க சக்திகளுக்காக ஏதிராக நாம் ஒவ்வொருவரும் போராடினால் நாமும் வெற்றியடையலாம்.. நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும்.

பிரிட்டன் ஈராக் நாட்டிலிருந்து வெளியேறும் போது பாஸ்ரா நாட்டின் பழமையான அரண்மனை ஒன்றினை ஈராக் மக்களிடம் ஒப்படைத்தது. பாஸ்ரா என்ற இடமானது ஈராக்கிலிருந்து 550 கீ.மீ தூரத்தில் தெற்குப்பகுதியில் அமைந்து உள்ள நகரமாகும். பிரிட்டன் படைகள் பாஸ்ரா பகுதியிலிருந்து விரட்டு ஓடியதை கண்ட ஈராக் நாட்டு இளைஞர்கள் 7.9.2007 அன்று அங்குள்ள தெருக்களில் மகிழ்ச்சியுடன் அந்த வெற்றியினை கொண்டாடினார்கள்.

'நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது, அவனே உயிர்ப்பிக்கின்றான், (அவனே) மரணிக்கும்படியும் செய்கின்றான், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த பாதுகாவலரும் இல்லை, எந்த உதவியாளரும் இல்லை.' திருக்குர்ஆன் 9 : 116

சென்ற வாரம் Guardian News Agency என்ற நிறுவனமானது, ஈராக் நாட்டினை பற்றி சில அதிர்ச்சியான தகவல்களை தந்துள்ளது.


ஈராக் நாட்டில் இது வரை 1.2 மில்லியன் மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.


48 சதவீதமான மக்கள் துப்பாக்கி குண்டு வெடிப்பால் இறந்து போய் விட்டனர்.20 சதவீதமான மக்கள் கார் குண்டு வெடிப்பால் இறந்து போய் விட்டனர்.9 சதவீதமான மக்கள் வெடி குண்டு வெடித்து அதன் மூலமாக காயம் ஏற்பட்டு இறந்து போய் விட்டனர்.6 சதவீதமான மக்கள் அங்கு ஏற்பட்ட விபத்துக்களால் உயிர் இழந்து விட்டனர்.6 சதவீதமான மக்கள் தவிர்க்க முடியாத பல விபத்துக்களால் இறப்பு ஏய்தனர்.


நன்றி: Khaleej Time

Sep 6, 2007

ஆயுத பலம் அமைதி எங்கே? அபூஅஃப்ரின்

ஆங்காங்கே அரை தூக்கத்தில் பரண் மேல் பதுங்கிக் கிடந்த தீவிரவாதத்தினை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் பிரச்சனையின் மூலம் குளிர் காய்ந்த ஆதிக்க அமெரிக்க தற்போது சமாதான பேச்சு வார்த்தைக்கு வழி வகுக்கிறது என்ற போர்வையில் உலக மக்களின் நிம்மதியினை நித்தமும் கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை தான். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா கையாண்ட அணுகு முறைதான் தீவிரவாதமும் மற்றும் தீவிரவாதிகளும்; வெறிகொண்டு எழுந்ததற்கு ஒரு காரணமாக இருப்பதாக பல உலக தலைவர்களின் கருத்தாகும். இதனால் தான் என்னவோ அடிக்கடி அமெரிக்காவில் நாட்டில் அந்த நாட்டு அரசிற்கு ஏதிராக பல எதிர்ப்புகள் அங்கு நடைபெற்று வருகின்றன.
ஈராக் நாட்டிற்காக வேண்டி மேலும் 50 மில்லியன் டாலர் வேண்டும் என்ற கோரிக்கையினை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் சமீபத்தில் கேட்டு உள்ளார். தற்போது ஈராக் நாட்டிற்காக மட்டும் ஒரு வாரத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுவதாக அமெரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் Washington Post தெரிவித்து உள்ளது.
ஈராக்கில், அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக தன்னுடைய படைகளை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு அனுப்பி வைத்து இருந்த இங்கிலாந்து நாடு தன்னுடைய படைகளை ஈராக்கில் உள்ள எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள பஸாரா என்ற இடத்திலிருந்து 2.9.07 அன்று இரவு 11 மணி அளவில் திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த தகவலை ஈராக் நாட்டு படைத்தலைவரான General Mohan Farhad ( Commander of Basra Millitary Operations) அவர்கள் கூறினார்கள். இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமரான Gordon Brown அவர்களுக்கு அந்நாட்டில் பல பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளும் அங்கு ஆரம்பித்து விட்டன என்பதனை கருத்தில் கொண்டும் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்றும் இங்கிலாந்தை சார்ந்த மக்கள் கூறிகிறார்கள்.
உலக வரலாற்று ஏடுகளில் வைர முத்திரையாக இருந்த இங்கிலாந்தும் தங்கள் பாரம்பரியம் கௌவரத்தை மறந்த அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு திரியும் கேவலமான போக்கை கைவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அங்கிருந்து முற்றிலும் படைகளை விலக்கிக்கொள்ள மற்ற நாடுகளும் முயற்சியினை எடுக்க வேண்டும்.
இஸ்ரேல் மற்றும் ஆதிக்க சக்திகள் பாலஸ்தீன நாட்டில் தொடுத்த தாக்குதல்களை ஆரம்ப கட்டத்திலிருந்து கண்டித்த வளைகுடா நாட்டின் முன்னோடியாக இருந்தது ஈரானும் அதனுடைய அதிபருமான அஹமதிநிஜாத் அவர்கள் மட்டும் தான் என்றால் மிகையாது. தற்போது இத்தகைய தாக்குதல்களை பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றினை எடுப்பதற்காக வேண்டி, அவரால் இணையத்தளம் ஒன்றானது தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் முகவரியானது http://www.ahmadinejad.ir/ என்பதாகும். இந்த இணையத்தளம் முகவரிக்கு நாம் நுழைந்தால் அவருடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தினை பற்றியும், தற்போது ஈரானில் ஏற்பட்ட வளர்ச்சியினை பற்றியும், முக்கியமாக அமெரிக்காவிற்கு அவர் பகிரங்கமாக அனுப்பிய கண்டன கடிதத்தின் சாராம்சமும்; இந்த இணையத்தளத்தில் உள்ளன. இவரின் இந்த இணையத்தளமானது பார்ஸி மொழியிலும், அரேபிய மொழியிலும், ஆங்கில மொழியிலும் மற்றும் பிரான்ஸ் மொழியிலும் வடிவமைக்கபட்டுள்ளது என்பதினையும் குறிப்பிட்டு சொல்லலாம்.
மற்றும் தற்போது நடைபெறும் இஸ்ரேல் மற்றும் மற்றும் பாலஸ்தீன பிரச்சனையானது இன்னுமொரு உலக போருக்கு வழியினை ஏற்படுத்தி தருமா என்ற கருத்தினையும் அறியவதற்காக வேண்டியும் இதனை அவர் ஏற்படுத்தி உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தில் செல்லுபவர்கள் அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விக்கு ஆம், இல்லை என்று பதிலை அளிக்க வேண்டும்.
வன்முறையும் பயங்கரவாதமும் எப்போதும் நிலையாக நீடிக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நாட்டின் ஏற்படும் சூழ்நிலைகளால் ஏவிவிட்டவனையே அது திருப்பித்தாக்கக்கூடும் அல்லது தானே துவண்டு வீழ்ந்து விடும் என்பதும் வரலாற்று ஏடுகளில் நாம் கண்ட உண்மையும் கூட. இருப்பினும் இன்றைய காலக்கட்டமானது தீவிரவாதம் என்பதிலிருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டிய கால கட்டத்திற்கு நாம் அனைவரும் ஆளப்பட்டு உள்ளோம்.
உலகில் எந்த மூலையில் தீவிரவாதம் நடந்தாலும் ஆதிக்க சக்திகளின் ஊடகத்துறையானது முன்னுரிமை கொடுப்பது என்னவோ, நம்முடைய சமுதாயத்தினருக்கு தான் என்றால் மிகைப்படுத்த பட்ட செய்தியாக போய் விட்டது என்ன செய்வது. அமைதிப்பூங்கா என்று பெயர் எடுத்துக்கொண்டு இருக்கும் இந்தியாவிற்குள் நைசாக தீவிரவாத்தினை ஆங்காங்கே தூவி வேடிக்கை பார்க்கலாம் என்ற நப்பாசையுடன் அமெரிக்கா அடி எடுத்து வைக்கிறது இந்திய மக்களே.. கொஞ்சம் எச்சரிக்கையாக நாம் இருந்தால், இந்த 60 ஆண்டு கால சுதந்திரத்தினை நாம் மேன்மேலும் பாதுகாக்கலாம் இத்தகைய கயவர்களிடமிருந்து..
உலகில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது இஸ்லாமிய இளைஞர்களும், அவர்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் தான். இதனை மறந்தும் மற்றும் மறைத்தும் ஆதிக்க சக்திகள் கொண்ட ஊடகங்கள் உண்மையினை சொல்லாமல் பொய்யினை திரிக்கின்றன. குறிப்பாக இலங்கை பிரச்சனையாக கொஞ்சம் பார்த்தோமனால் அங்கு அதிகமாக கொல்லப்படுவது இந்த சமுதாய மக்களாக தான் இருக்கும். 14.8.06 அன்று இங்கு நடந்த குண்டு வெடிப்பிற்கு பலர் பலியாகி உள்ளார்கள். குறிப்பாக சிறுவர் பாதுகாப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்த பள்ளி சிறுவர், மற்றும் சிறுமிகள் ஏராளமானவர்கள் இறந்து விட்டனர்கள். ஆனாலும் அந்த சமயத்தில் அந்த பிரச்சனை இலங்கையில் நடந்தாலும் சில விஷம் பிடித்த விஷமிகள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை எப்படியாவது நடத்துவோம் என்ற நம்பிக்கையுடன் நடத்திக் காட்டி விட்டார்கள் என்பது நமக்கு தெரியும்.
மத்திய கிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று சில மாதங்களுக்கு முன்பாக கூறினார்கள் சிரியா மற்றும் ஈரான் அதிபர்கள். அல்ஹம்துலில்லாஹ்.. புதிய மத்திய கிழக்கு உதித்துள்ளதாக கூறும் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் அவர்கள், அந்தப்பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பார்வை ஒரு மாயை தோன்றம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய மத்திய கிழக்கு உதயமாவதைப்பற்றி பற்றி பிரிட்டனும், அமெரிக்காவும் பேசிக்கொண்டு இருந்ததே ஒழிய, இங்குள்ள மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து அவைகள் அக்கறை கொண்டிருக்கவி;ல்லை என்ற ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் தெரிவித்துள்ள கருத்தானது ஏற்புடையதாக உள்ளது.
அமெரிக்க குடியரசு நாடுகளில், சராசரியாக 100 நபர்களில் 90 சதவீதமான நபர்களிடம் கைத்துப்பாக்கி மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் உள்ளன. உலகத்தில் ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. உலகில் சாராசரியாக 875 மில்லியன் அமெரிக்கா மக்கள் தொகையில் 270 மில்லியின் மக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த அறிக்கையினை ஜெனிவா நாட்டைச்சார்ந்த (Small Arms Survey 2007 Geneva – based Graduate Institute of International Studies.) அமைப்பானது கூறி இருப்பதாக துபாயிலிருந்து வெளிவரும் Khaleej Times என்ற செய்திப்பத்திரிகையை 30.8.2007 அன்று தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் அந்த அறிக்கையின் படி, 8 மில்லியன் மக்கள் தொகையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் புதிய ஆயதங்களை 4.5 மில்லியன் மக்கள் வாங்குகிறார்கள். உலக அளவில் பார்த்தால் சராசரி 7 நபர்களில்; ஆயுதங்கள் வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு நபராக இருக்கும். அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால் அங்கு 10 நபர்களில் ஒரு நபரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன.
சீனாவில் சராசரியாக 100 நபர்களில் மூன்று நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. 40 மில்லியன் மக்கள்களிடம் தற்போது சீனாவில் தற்காப்பு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவில் எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 மக்களில் நான்கு நபர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மன், பிரான்ஸ், பாகிஸ்தான், மெக்ஸிகோ, பிரெசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.
ஏமன் நாட்டில் 100 மக்களில் சாராசரியாக 61 நபர்களிடம் துப்பாக்கி ஆயுதங்கள் உள்ளன. பின்லாந்து நாட்டில் 56 நபர்களிடமும், சுவிஸ்லாந்து நாட்டில் 46 நபர்களிடமும், ஈராக் நாட்டில் 39 நபரிடமும், செர்பியா நாட்டில் 38 நபர்களிடமும், மற்றும் பிரான்ஸ் கனடா சுவீடன் ஆஸ்திரேலியா ஜெர்மன் போன்ற நாடுகளில் சராசரியாக 30 நபரிடம் இது போன்ற ஆயுதங்கள் உள்ளன. ஏழை நாடான நைஜீரியாவில் சராசரியாக 100 நபர் இருந்தால் ஒரு நபரிடம் மட்டும் தான் ஆயுதங்கள் உள்ளன.
அமெரிக்கா மற்றும் உள்ள பல மேலை நாடுகளில் உள்ள பள்ளி மாணாக்கர்கள் தங்கள் பாடப்புத்தகங்களுக்கிடையே கைத்துப்பாக்கியினையும் சுமந்து செல்கிறார்கள். அவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திலேயே சுட்டுக்கொள்ளும் பல மாணாக்கர்களை பற்றிய பல செய்திகளை நாம் படித்து இருக்கின்றோம். சில சமயங்களில் பெற்றோர்களை சுடக்கூடிய அளவிற்கும் மாணாக்கர்கள் சென்று விடுகிறார்கள்.
அமெரிக்கா நாட்டைச்சார்ந்த சிறு குழந்தை ஒன்று சமீபத்தில் காணாமல் போய் விட்டது. அதற்காக வேண்டி பல பத்திரிகைகளில் பல டாலர்கள் செலவு செய்து பல விளம்பரங்களை கொடுத்தார்கள். அந்த குழந்தையினை தேடுவதற்கு பல வீணாண செலவுகள் செய்தார்கள். பல பரப்பரப்புகள்.. அந்த சமயத்தில்.. ஆனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் பல நாடுகளில் பல குழந்தைகள் மாய்ந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதற்காக வேண்டி பல செலவுகள்.. பல கோடிகள்..

Aug 30, 2007

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? - 6

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.
......................................................................................................................

தொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)

இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.

ஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.

'இன்னி அப்தல்லாஹ்' நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.

மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)

அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.

நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.

தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.

ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).

முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.

இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.

வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.
நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.

இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.

பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.

மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.

ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.

ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.

இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.

அடுத்து,
வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.

நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.

அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.

முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.

இந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம்.

மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது.
அந்தப் பொருள் என்ன?'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.

நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.

குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.

1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.

ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.

இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும்.

அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.

இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.

மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.

இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.

என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.

நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.

ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.

இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,

இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)

இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.
தேவன் நாடட்டும் தொடர்வோம்

Aug 23, 2007

இணைய உலக காயங்கள்

முத்துப்பேட்டை அபூஅஃப்ரீன்


இளைய தலைமுறையினர், தாங்களின் அறிவினை வளர்ந்துக்கொள்ள வேண்டி பற்பல தகவல் சாதனங்கள் தற்போது வந்துக்கொண்டு இருக்கும் இத்தகைய தருணத்தில், வலையத்தளம் இணையத்தளம் சார்டிங் வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றினால் இளைய சமுதாயத்தினரை பல வகையான நோய்கள் அவர்களை பிடித்துக்கொண்டு பித்து பிடித்தது போல் ஆக்கி வருகிறது. (பார்க்க: இது தான் இஸ்லாம் இணையத்தள பகுதி, பெற்றோர்களே.. கொஞ்சம் நில்லுங்கள்.. என்ற கட்டுரையினை..)

பள்ளி மற்றும் கல்லூரியின் விடுமுறைகளில், நமக்கு தெரிந்து கோடை கால கணிப்பொறி சிறப்பு பயற்சி வகுப்புகள் (Computer Training Special Classes) நடைபெறும். ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான, சீனாவில் கணிப்பொறியின் வளர்ச்சியினால் அதிகமான இளைய சமுதாயத்தினர் நரம்பு தளர்ச்சி, மனக்கஷ்டம், மன வேதனை, பயம் போன்ற பல நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களிலிருந்து இவர்களை மீட்க வேண்டி பத்து நாள்கள் கொண்ட கோடை கால சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. இந்த வகுப்புகளானது, குறிப்பாக இணையத்தளம் மற்றும் வலையத்தளம் போன்றவற்றில் உள்ள விளையாட்டுகளில் அடிமையாகி போன 14 வயதிலிருந்து 22 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினருக்காக, பிஜிங்கில் (Beijing) உள்ள இணையத்தள மீட்பு பயிற்சி குழுமம் (Internet Addiction treatment Centre) என்ற அமைப்பானது நடத்தி இருக்கின்றன.

லண்டனில், தற்போது எடுக்கப்பட்ட ஆய்வின் படி ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களின் உடல் எடையானது அவர்களின் வயதுக்கு மீறியதாக இருக்கிறது. காரணம் என்னவென்றால், கணிப்பொறி முன்பாக பல மணி நேரங்களை அவர்கள் செலவிடுகிறார்கள். அத்துடன் பொழுது போக்கிற்காக அவர்கள் யாருமே வெளியே செல்வதில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்து பல உணவுப்பொருட்களை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் அனைத்துமே கொழுப்பு சத்து, புரதச்சத்து, பைபர் சத்து அதிகம் உள்ளதான உணவாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவானது சீக்கிரமாக ஜீரணமாகமால் அவர்களின் உடலுக்கு மிக பெரும் எடையினையும் மற்றும் ஆபத்தினை கொடுக்கிறது. இவர்களின் உடலினை எப்படியாவது குறைக்க வைக்க வேண்டும் என்று லண்டனில் உள்ள பல பெற்றோர்கள் கலலையுடன் புலம்புகிறார்கள்.

லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மின்னஞ்சல் (E.mail) மூலமாக பல தொல்லைகள் நாள்தோறும் அதனை உபயோகப்படுத்துவர்களுக்கு அதிகரித்து விட்டன. இந்த தொல்லைகள் அந்த நாடுகளில் பரவியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுக்கும் பரவி விட்டன. உலகில் யாராவது எங்கிருந்தாவது ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, என்னிடம் அதிகமாக பணம் உள்ளது, அதனை எப்படி செலவு செய்வது என்பது தெரியவில்லை, ஆகையால் தாங்களை என்னுடைய Life Partner ஆகவோ அல்லது Business Partner ஆகவோ சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால் தாங்களின் வங்கி கணக்கு எண்ணை எனக்கு தெரியப்படுத்தவும். நான் பணம் அனுப்பி வைக்கிறேன் என்று இருக்கும். நாம் பணம் கிடைக்க போகிறது என்பதினை எண்ணி அனுப்பி வைத்தால் நம்முடைய வங்கி கணக்கில் உள்ள பணமானது காணாமல் போய்விடும். இவர்களை தற்போது E.mail Thives என்று ஆங்கில மொழியில் கூறுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட செய்தியானது சிறிய ஒரு உதாரணம் தான். இதனை படிக்கும் நண்பர்களுக்கு இது போல் நடந்து இருக்கும் என்பது எனது கருத்து. இணையத்தளத்தில் எத்தனையோ புதிய செய்திகள் இருக்கின்றன. ஆனால் அதனை விட்டு விட்டு புதியதாக எங்கு யாரை ஏமாற்றலாம் என்ற நோக்கத்தில் திருடர்கள் தோன்றுகிறார்கள் நாள்தோறும். அத்துடன் விபச்சாரங்கள் பெருகுவதற்கு மற்றும் சொல்ல முடியாத பல அனாச்சாரங்கள், கலாச்சார விபரீதங்கள் அதிகரித்து விட்டமைக்கு இத்தகைய சாதனங்களை தவறாக பயன் படுத்துவோரையும் நாம் கண் கூடாக காண்கிறோம்.

எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும் பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கி விடுவோம். இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம். அல்குர்ஆன் 4 : 31

தென்கொரியா நாடானது, உலகின் முதன் முதலில் இயந்திர மனிதனை பற்றிய ஆய்வு ஒன்றினை (World’s First Robot ethics Charters) நடத்தி உள்ளது. Professor. Kim Dae – won (Professor of Myongji University) அவர்கள் தலைமையில் அந்த ஆய்வானது நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் 12 க்கும் அதிகமான அறிவியல் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், மற்றும் பல்கலை கழக மாணாக்கர்களும் கலந்துக்கொண்டனர். இனிவரும் ஆண்டுகளில் மனிதனும் மற்றும் இயந்திர மனிதனும் கலந்து மற்றும் சேர்ந்து பணிகளை செய்தால் எவ்வாறு இருக்கும் என்று ஆராய்ந்தனர்.

2013 ஆம் ஆண்டுக்குள் தென்கொரியா நாட்டில் உள்ள எல்லா வீட்டிலும் இயந்திர மனிதன் (ரோபாட் - Robot) கொண்டு வருவோம். மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைக்கவும் மற்றும் வீட்டு பணிகளை செய்யவும் ரோபாட் என்ற இயந்திர மனிதன் பயன் படுத்தப்படும் என்றும் அவர்கள் கருத்தினை வைத்தனர்.

மின் யாங் - ஷி (Min young – Gi – Manager of the Korea Advanced Intelligent Robot Association) அவர்கள் கூறும் போது, வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூட மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணிகளையும், நாட்டின் இராணுவத்தின் பல பணிகளை செய்யவும் ரோபாட்கள் பயன் படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் 2012 ஆம் ஆண்டில் உலகின் முதல் ரோபாட் தீம் பூங்கா (Robot Land) ஒன்றினை உருவாக்க இப்போது இருந்தே பணிகளை மேற்கொண்டு வருகிறாhர்கள். இதற்காக வேண்டி பல டாலர் செலவுகளை செய்யவும் இப்போது இருந்தே தயாராகி விட்டார்கள் அந்த நாட்டினர்.

கொரியா நாட்டில் உள்ள (Korea Advanced Institute of Science and Technology (KAIST) உருவாக்கி உள்ள ரோபாட்டானது, பெண்களுடன் கலந்து உரையாடும், அவர்களுடன் பாடும், அவர்கள் செய்யும் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்யும். மற்றும் ஒப்ரோ (OFRO) என்ற ரோபாட்டானது வரும் ஆண்டுகளில் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளது என்றும் அந்நாட்டினர் கூறுகிறார்கள். வருங்காலங்களில் கொரியா நாடுகள் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் ரோபாட்டிஸம் (Robotism) வரப்போகிறது வளரப்போகிறது. ரோபாட் வருகையின் மூலம் நன்மை கிடைக்கும் பட்சத்தில் நாம் அதனை வரவேற்கலாம். ஆனால் தீமைகளாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிச்சயமாக ஆட்சேபணை எழும்.

நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.அல்குர்ஆன் - 20 :96

ஜப்பான் நாட்டில் தற்போது முதியோர்களும் கணிப்பொறி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு கணிப்பொறி சம்மந்தமான பாடங்களை சொல்லிக்கொடுக்கும் முயற்சியில் அங்குள்ள ஒரு அமைப்பானது உருவாகி உள்ளது. இரண்டு முதிய வயதுடைய பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 200 முதியோர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கணிப்பொறி சம்மந்தமான அனைத்து பாடங்களை நன்றாக கற்று வருகிறார்கள். இவர்கள் தாங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களுக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். ஜப்பான் ஊடகத்துறையானது தந்த ஆய்வானது, 60 வயதிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தற்போது கணிப்பொறியினை உபயோகப்படுத்தும் அளவானது 15.4 சதவீதத்திலிருந்து 32.3 சதவீகிதம் ஆகி விட்டது என்று சொல்கிறது. ஒரு பக்கம் சிறுவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி இன்னொரு பக்கம் முதியோர்களுக்கு பயிற்சி.. என்ன செய்யும் உலகம். உலகத்தின் பல பகுதிகளில் சிறார்கள் கணிப்பொறியினால் நோய் வாய் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் வயதான காலத்தில் நோய் வாய்ப்பட்ட பெரியோர்கள் அதிகமான நோயினை இணையத்தளம் வழியாக தானாகவே தேடிக்கொள்கிறார்கள்.

ஆங்கில செய்தி நிறுவனமான (Guardian News Service) சமீபத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின் படி, இண்டர் நெட் மற்றும் வீடியோ விளையாட்டு சாதனங்களின் வளர்ச்சியினால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக மனக்கவலை பெறுகிறார்கள். அவர்களுக்கு வரும் மின்னஞ்சலை திறக்கும் போது அவர்களுக்கு கிடைப்பதோ மிகபெரும் மனக்கஷ்டம் தான் (E.mail Stress) இவற்றினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் அதிகம். ஏனெனில் பெண்களை மிகவும் பலவீனமானவர்கள். அந்த பலவீனத்தை பயன் படுத்தி அவர்களை பாழ்படுத்தி வருகிறார்கள். இவர்கள் கணிப்பொறியின் முன் அமர்த்தால் ஏதோ ஒன்றினை இழந்த மாறி ஆகிவிடுகிறார்கள். மற்றும் பல்வேறு நோய்களுக்கும் வெகு விரைவில் ஆளாகி விடுகிறார்கள். கணிப்பொறிக்கே முற்றிலும் அடிமையான மாறி அவர்கள் போய் விட்டார்கள்..

மேலும் அந்த அறிக்கையின் (Guardian News Service) படி பார்த்தோமானால்,

1. 2006 ஆம் ஆண்டில் உலகில் 6 திரில்லியன் (ஒரு திரில்லியன் என்பது 100 பில்லியனுக்கு சமம்) வியாபார நோக்கம் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளன.

2. சாதாரண அலுவலர்கள், (Average Office workers) ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 45 நிமிடங்களை செலவு செய்கிறார்கள்.

3. மிகப்பெரிய அலுவலர்கள், (Senior Management Workers) ஒரு நாளைக்கு மின்னஞ்சலை மட்டும் பார்க்க 4 மணி நேரங்களை செலவு செய்கிறார்கள்.

4. 80 சதவீதமான மின்னஞ்சல்கள் தேவையில்லாத செய்திகளையும், மற்றும் ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.

5. 62 சதவீதமான அலுவலர்கள், அவர்களின் மின்னஞ்சலை வீட்டிலும் மற்றும் விடுமுறை காலங்களிலும் பார்க்கிறார்கள்.

6. 20 சதவீதமான அலுவலர்கள் மின்னஞ்சல் (E.mail Stress) தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபாஸ்ட் புட் காலத்தில் எல்லாமே ஃபாஸ்டாக போய்க்கொண்டே இருக்கிறது. அது போல் வரக்கூடிய நோய்களும் மிக வேகமாக பரவுகிறது. நோய்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தான் நாம் இருக்கிறோம். ஆனால் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய மன பக்குவதில் நாம் யாருமே இல்லை. நம்முடைய சந்ததியினரையும் மேற் குறிப்பிட்ட பல நோய்களிலிருந்து இனிவரும் காலங்களில் பாது காக்கலாம். புதிய உலகம் என்ற மாயை பல துறைகளில் எப்படி எல்லாம் ஆட்டி படைக்க போகிறது என்பதனை நாமும் எதிர் பார்க்கலாம். ஏக இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த சிந்தனை கொண்டு நாம் அனைவரும் நன்றாக சிந்தித்தால் நாம் நோய் நொடி இல்லாமல் வாழலாம். மற்றும் இறைவன் நமக்கு கொடுத்த அறிவான கல்வி ஞானத்தை கொண்டு நாம் அனைவரும் நல்ல மாதிரியாக வழியில் சிந்திப்போம்.. செயல் படுவோம்..

கல்வியானது ஒரு அத்தியாவசியமான ஒன்றாக தான் தற்போது உள்ளது. ஆனால் அதனை பெற்ற பல கல்வியாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தினாலும் அவர்களை எப்படியாவது வழி கேடுக்க வேண்டும் என்ற தருணத்தில் பல துறைகள் உள்ளன. பத்திரிகைத்துறை என்றும் ஊடகத்துறை என்றும் அழைக்கப்படும்

தகவல் துறைச்சார்ந்த துறைகள் தான் தற்போது மக்களை வழிகேடுக்கும் மிக பெரும் பணிகளை செய்கின்றன. இளைய சமுதாயத்தினரை நல் வழிப்படுத்தும் எத்தனையோ இணையத்திரட்டிகள், இணையத்தளம், வலையத்தளம் உள்ளன. மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தினை எளிதாக புரிந்து கொள்ள எழுத்து ஆக்கத்திலும், கட்டுரை வடிவத்திலும் கொடுக்க பல இஸ்லாமிய இணையங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அவற்றினை பார்க்கும் நம் சமுதாயத்தினரும் மற்றும் மாற்று மதத்தினருக்கும் தாங்களை சீர்படுத்திக்கொள்ளதற்கு ஒரு வாய்ப்பாக அது அமைந்து கொடுக்கும் நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் என்பதில் உறுதி தான்.

இணையத்தில் பல நல்லவைகளும் இருக்கும் அது போல் சில தீமைகளும் இருக்கும். தீமை எதுவென்று பிரித்து உணரக்கூடிய அறிவினை நமக்கு ஏக இறைவன் கொடுத்து இருக்கிறான். அது போல் நன்மை எதுவென்றும் நமக்கு தெரியும். அதனை நாம் பலமாக பற்றி பிடித்து கொள்ள வேண்டும். தீமைகள் என்னவென்பது நமக்கு தெரிந்தும் அதன் பின் போய் விடக்கூடாது. பின்பற்றினால் ஷைத்தான் நமக்கு நண்பனாகி விடுவான். நன்மையினை மட்டும் எடுத்துக்கொண்டு, நன்மைகள் புரிந்து நன்மைகள் செய்து நன் மக்களாய் இருப்போம்.. இறப்போம்.

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால், வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித்தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவான் உங்களுக்கு அறிவித்து விடுவான். அல்குர்ஆன் 5:105